நிமல் சிறிபாலவுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டு!

0
409

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான குசலா சரோஜினி வீரவர்தனவினால் இந்த அறிக்கை இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான குசலா சரோஜினி வீரவர்தன ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற விசேட தர அதிகாரி எஸ்.எம்.ஜி.கே ஆகியோர் தலைமையிலான குழுவை ஜனாதிபதி நியமித்தார்.

பெரேரா ஜூலை 22 அன்று விசாரணை அறிக்கையை ஜூலை 31 க்கு முன் தன்னிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டார்.