திருமணத்தின் போது மணமகள் வேண்டாம் என்று கூறிய மணமகன்: காரணத்தை கேட்டு அதிர்ந்து போன மணப்பெண்!!

0
1131

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கவும், அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவும் செய்யப்படுகிறது. அப்படியுள்ள திருமண நிகழ்ச்சியை மிகவும் அமர்க்களமாக குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடத்துவார்கள்.

அந்த வகையில், திருமண மேடை வரை சென்ற பிறகு திடீரென நடந்த சம்பவம் ஒன்று பலரையும் அதிர வைத்துள்ளது. துனிசியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒரு பெண்ணை விரும்பி அவரையே திருமணம் செய்ய ஆசைப்பட்டு அந்த பெண்ணின் புகைப்படத்தை தனது தாயாருக்கு காண்பித்துள்ளார்.

இதன் பின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் மிக மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது. அப்படி ஒரு நிலையில் திருமண நாளும் வரவே புகைப்படத்தில் பார்த்த தனது மருமகளை முதன் முறையாக அன்று தான் நேரில் பார்த்துள்ளார் மணமகனின் தாயார்.

மருமகளை நேரில் பார்த்து விட்டு மாமியார் கூறிய கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, திருமண நாளில் தனது மகனை அழைத்த தாயார் நீ பார்த்த பெண் கவர்ச்சியாக இல்லை என்றும் அவர் மிக குள்ளமாக இருக்கிறார்.

இதனால் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார். தாய் இப்படி கூறியதால் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் உடனே மாப்பிள்ளையும் திருமணத்தை கைவிட்டுள்ளார்.

மேலும், மேடை வரை வந்து திருமணம் நின்று போனதால் தன்னை காண்பவர்கள் பலரும் தன்னை பற்றி ரகசியமாக புறம் பேசுவதாகவும் இதன் காரணமாக தான் அவமானமாக உணர்வதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு என யாரும் இல்லை. அனாதையாக நான் திருமணத்துக்கான பண செலவை தனி ஆளாக சேர்த்து பார்த்து பார்த்து செலவு செய்ததாகவும் திருமணம் நின்றதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.