அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மர்ம துளைகள் காரணத்தை தேடி அறியும் ஆய்வாளர்கள்

0
445

தேசிய கடல்சார் சூழலில் நிர்வாகம் (என்.ஓ.ஏ.ஏ.) என்ற அமைப்பு சார்பில் விஞ்ஞானிகள் குழு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் போது அட்லாண்டிக் கடலின் ஆழமான தரைப்பகுதியில் சுமார் 2,540 அடி ஆழத்தில் வரிசையான முறையில் மர்மான துளைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த துளைகள் மனிதனால் உருவாக்கப்பட்டதை போலத் தோன்றினாலும், கடலின் அடிப்பகுதிக்குச் சென்று எந்தவொரு மனிதராலும் இப்படி துளைகளை அமைக்க முடியாது.

எனவே சுற்றியிருக்கும் வண்டல் குவியல்களால் இந்த துளைகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.