ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இளம்பெண் உயிரிழப்பு

0
347

புகையிரத பாதைக்குள் நுழைந்த இளம்பெண்கள் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கிரேசியன் பிரிவு உடபுஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் நேற்று பிற்பகல் வேளையில் யுவதிகள் இருவரும் மோதுண்டுள்ளனர்.

உயிரிழந்த யுவதியும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் யுவதியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.