தென்னிலங்கையில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடம் அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் தகாத முறையில் தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பயணி தொல்லை கொடுத்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் பயணி தொடர்பில் நடத்துனரிடம் பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டதுடன் தன்னிடம் காளொளி இருப்பதாகவும் பேருந்தை பொலிஸ் நிலையத்திற்கு விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நடத்துனரிடம் கெஞ்சிய காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நடத்துனரிடம் அப்பெண் கோரிக்கைவிடுத்தபோதும் பொலிஸ் நிலையம் செல்லாது தொல்லை கொடுத்த பயணியை நடுவழியில் இறக்கிவிட்டதாகவும் தெரியவருக்கின்றது.
அதேவேளை பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகளிடம் இவ்வாறு சிலர் அருவருக்கத்தமுறையில் அத்துமீறி நடந்துவருவதாக விமர்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.