கோட்டா கோ கமவுக்கு எதிராக அமைச்சர் பிரசன்ன ஆவேசம்!

0
615

கோட்ட கோ கம அரச எதிர்ப்புப் போராட்ட தளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா என்ற இறுதி இலக்கை அடைந்துவிட்டதால் கோட்ட கோ கம மற்றும் கோட்ட கோ ஹோம் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார்.

கோட்ட கோ கமவை எதிர்த்து அமைச்சர் பிரசன்ன ஆவேசம்! | Minister Prasanna S Passion Against Kota Go Kama

“அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்யும் அராஜகவாதிகளுக்கு போராட்டதளம் ஒன்று கூடும் இடமாக மாறியுள்ளது” என்றார். கோட்டகோகம போதைக்கு அடிமையானவர்கள், பாதாள உலகம் மற்றும் கொள்ளையர்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தை சூழவுள்ள இரும்பு வேலி திருடப்பட்டுள்ளதாகவும் செயலகத்திற்குள் இருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெறுமதியான பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டகோகம ஒரு சட்டவிரோத குடியேற்றம் என்றும் அது நகர அபிவிருத்தி அதிகாரசபை (யுடிஏ) சட்டத்தை மீறுவதாகவும் ரணதுங்க கூறினார். காலி முகத்திடல் ஒரு பொதுச் சொத்து” என அவர் மேலும் தெரிவித்தார்.

கோட்ட கோ கமவை கொக்கெய்ன் கடத்தல்காரர்கள் கைப்பற்றியுள்ளதாக ரணதுங்க கூறினார். “அவர்கள் காவல்துறையினரை துரத்துகிறார்கள். ஏனெனில் அவர்களின் கோகோயின் கடத்தல் நடவடிக்கைகளை செயல்படுத்த இது சிறந்த இடம்” என்று அவர் கூறினார்.

மேலும், கோட்டகோகம எதிர்ப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணியானது போராட்டங்களை நடத்துவதற்கு பொருத்தமான இடமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.