கனடாவில் லாட்டரியில் பெரும் தொகையை வென்ற யாழ் தமிழன்!

0
495

யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்குச் சென்று வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவருக்கு கனடா லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசான 500,000 கனேடிய டொலர்களை வென்றுள்ளார்.

ஜீவகுமார் சிவபாதம் என்பவர் கனடாவின் Lotto Max நிறுவனத்தின் லொத்தர் பரிசையே வென்றுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் அந்த பணத்தில் கார் கொள்வனவு செய்துள்ளதுடன் தனது பிள்ளைகளை கல்விக்காக பணத்தை செலவிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் இது தான் எனது முதல் பெரிய வெற்றி. நான் என் லொட்டரி டிக்கெட்டை OLG செயலியில் சரிபார்த்த போது பரிசு விழுந்தது தெரிந்தது என கூறியுள்ளார்.