நோபல் பரிசு பெற்ற அயர்லாந்தின் முதல் மந்திரி காலமானார்

0
407

77 வயதை உடைய அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற அயர்லாந்தின் முதல் மந்திரியாக இருந்த டேவிட் ட்ரம்பிள் காலமானார்.

அவருடைய முயற்சியின் கீழ் 1998ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியதுடன் அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்பட்டுள்ளவர்.

அப்பகுதிகளில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3600 பேர் பலியானார்கள். அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநிறுத்த அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு 1998ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவர் மறைந்து விட்ட செய்தியை அவரின் குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளதாக டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி (யூயூபி) தெரிவித்துள்ளது.