ஜனாதிபதி மாளிகையில் திருடிய 3 ஆசாமிகள் கைது!

0
524

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் கடந்த 9-ம் திகதி ஜனாதிபதி மாளிகை, அதிபர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை ஆக்கிரமித்தனர்.

இருப்பினும், பின்னர் அவர்கள் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக வெளியேறினர்.

எஞ்சியிருந்த ஒரு சிலரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பொலிஸார் சேத விவரங்களை ஆய்வு செய்தனர்.

இதில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட அரிய கலைப்பொருள்கள் மாயமாகியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இது தொடர்பில் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை விற்க முயன்ற 3 பேரை பொலிஸார் கைது செய்தனர்

போதை ஆசாமிகளாக அவர்கள் 3 பேரும் ஜனாதிபதி மாளிகையில் திரைச்சீலைகளை தொங்கவிடுவதற்காக சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட 40 பித்தளை கொக்கிகளை திருடி சென்றதாகவும் ராஜகிரியா நகரில் உள்ள கடையில் அவற்றை விற்க முயன்றபோது பொலிஸில் பிடிப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.