அமெரிக்காவில் குழந்தையை திருட முயன்ற செவிலியர் வேடமிட்ட பெண் கைது!

0
351

அமெரிக்காவில் தாதியாகப் பாவனை செய்து மருத்துவமனையிலிருந்து பச்சிளங்குழந்தையைத் திருட முயன்றதாகப் பெண் மீது கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இம்மாதம் 14-ஆம் திகதி கலிபோர்னியா (California) மாநிலத்திலுள்ள Riverside University Health System மருத்துவ நிலையத்தில் நடந்தது.

தாதியாகப் பாவனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஜெசினியா மிரோன் என்ற 23 வயதுப் பெண் நோயாளியின் அறைக்குள் நுழைந்து குழந்தையை எடுத்துச் செல்ல முற்பட்டதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் பச்சிளங்குழந்தையைத் திருட முயன்ற தாதி! | A Nurse Who Tried To Steal A Baby In America

அது குறித்துத் தகவல் அறிந்த மருத்துவமனையின் ஊழியர்கள் அவரைப் பிடிக்க முனைந்தனர். இருப்பினும், அந்த தாதி மிரோன் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டது. அவர் குழந்தையை மருத்துவமனையில் விட்டுச்சென்றதாக தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் பின்னர் மிரோனைக் குடியிருப்புப் பகுதியொன்றில் கைது செய்தனர். இதன்போது அவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.