அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை அமெரிக்க நீதிபதி ஒருவர் கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு அமெரிக்கா வொசிங்டனில் இலங்கை தூதரகத்துக்கான கட்டிடம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக, நடப்பு விலையிலும் பார்க்க அதிக விலையை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து பணத்தை பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பண மோசடி
தரவுகளின்படி அவர் 332,027 அமெரிக்க டொலர்களை பொய்க்கூறி இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் அவர் இந்த மேலதிக பணத்தை ஒரு வருட காலத்துக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்பினார்.
இந்த நிலையில் அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் இது வழிப்பறி கொள்ளைக்கு ஒப்பான செயல் என்றுகூறி வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பணத்தை திருப்பி அனுப்பிய போதும் இது இலங்கை மக்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட திருட்டாகவே கருதப்படுகிறது. அத்துடன் சக்திவாய்ந்த நாடு ஒன்றில் தலைநகரில் இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே நீங்கள் செய்தது கடுமையான துரோகம் என்று நீதிபதி குறிப்பிட்டார். குறித்த பணத்தை இலங்கை அரசாங்கத்துக்கு திருப்பியனுப்பி நட்டத்தை ஏற்படுத்தாவிட்டாலும் இரண்டு வருட நன்நடத்தை சோதனை காலத்தையும் 5000 டொலர்கள் அபராதத்தையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.