19 வயது பாடசாலை மாணவி முத்துரட்ணம் ஜிலோனி மேற்கொண்ட விபரீத முடிவு!

0
692

19 வயது பாடசாலை மாணவி முத்துரட்ணம் ஜிலோனி மேற்கொண்ட விபரீத முடிவு! மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாடசாலை மாணவி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (22-07-2022) பிற்பகல் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தலவாக்கலை பெயாவல் தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதான முத்துரட்ணம் ஜிலோனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இவர் லிந்துலை பிரதேசத்திலுள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் இரண்டாம் வருட மாணவியென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல தலவாக்கலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவரின் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.