மீண்டும் திறக்கப்பட்ட காலி முகத்திடல் வீதி!

0
363

தற்காலிகமாக மூடப்பட்ட காலி முகத்திடல் வீதி இலகுரக வாகனங்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக 100 நாட்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி ரணிலை பதவி விலகுமாறு கோரி அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தடைகளை அகற்றும் பணி நேற்று இடம்பெற்றது.