ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் மாயமான அரிய பொருட்கள்!

0
404

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை என்பவற்றில் இருந்த சுமார் ஆயிரம் அரிய சிறப்புப் பொருட்கள் காணாமல் போயுள்ளன.

இந்நிலையில் காணாமல்போன பொருட்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அதோடு அங்கிருந்த சிலர் பழங்காலப் பொருட்களையும் சில உதிரிபாகங்களையும் மறைத்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் என்ற போர்வையில் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிக்கை உள்ளிட்ட இடங்களுக்குள் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஊடுருவி அங்கு இருந்த அரிய பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

அதேவேளை போராட்டம் என்ற போர்வையில் அரச இடங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.