யாழில் போதை ஊசி ஏற்றிய இளைஞன் பலி! யாழ்ப்பாணத்தில் என்னதான் நடக்கிறது?

0
794

யாழில் போதை ஊசி ஏற்றிய இளைஞன் பலி! யாழ்ப்பாணத்தில் என்னதான் நடக்கிறது? ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்ட சிறுநீர் மாதிரியில் போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது.

இளைஞனின் சடலம் இன்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.