33,600 லீற்றர் பெற்றோலுடன் பேராதனை நோக்கிச் சென்ற பவுஸர் பின்னோக்கி நகர்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (23) பிற்பகல் மீரிகம தங்கொவிட்ட வீதியில் ஹலுகம மலையில் பெற்றோல் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முத்துராஜவெலயிலிருந்து பேராதனைக்கு கொண்டு செல்லப்பட்ட 33,600 லீற்றர் பெற்றோல் இந்த பவுஸரில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹலுகம மலை பகுதியில் பவுஸர் திடீரென பின்னோக்கிச் சென்றதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.