நாடாளுமன்றத்தில் தற்போது ஜனாதிபதித் தெரிவுக்கான இரகசிய வாக்களிப்பு நடந்துகொண்டிருக்கின்றது.
இந்த வாக்களிப்பில் கலந்துகொண்ட துஷார இந்துநில் வாக்குச்சீட்டை தன்னுடை பக்கத்தைச் சேர்ந்தவர்கள் மறைவாக காண்பித்தார்.
அத்துடன், வாக்குப் பெட்டிக்குள் போடுவதற்கு முன்னர் துஷார இந்துநில் அதனை விரித்தும் தூக்கியும் காண்பித்தார்.
அதேவேளை வாக்கு சீட்டை எம்.பிக்கள் படமெடுத்தால் அவர்களுக்கு ஏழாண்டுகள்வரை நாடாளுமன்றம் வர தடை விதிக்கப்படலாம் என சபாநாயகர் மகிந்த ஜாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.