புதிய கிராமத்தை உருவாக்கும் சீனா!

0
623

இந்தியாவின் எல்லைக்குள் பாதுகாப்பு படைகளை தாண்டி ஊடுருவிச் செல்ல புதிய உள்சாலைகள், பாலங்களை சீனா அமைத்து வருவதை சாட்லைட் படங்கள் வெளியாகியுள்ளன.

டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளியான சாட்டலைட் படங்களில் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அங்கு கார் நிறுத்துமிடம் என அணைத்து வசதிகள் உடன் வீடுகள் கட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

பூட்டான் எல்லைக்குட்பட்ட பாங்கிடா என்ற அந்த கிராமத்தில் இருந்து இந்தியாவின் படைகளை நேராக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.