சுயாதீன கட்சியின் 9 தலைவர்களை திடீரென சந்தித்த சஜித்!

0
372

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சுயாதீன கட்சிகளின் 9 தலைவர்களை நேற்று (18-07-2022) பிற்பகல் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, புத்திக பத்திரன உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுயாதீன கட்சிகளின் சார்பில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, கலாநிதி ஜி.வீரசிங்க, பிரேமநாத் தொலவத்த, வீரசுமன வீரசிங்க, கெவிந்து குமாரதுங்க, கெவிந்து குமாரதுங்க, அசங்க நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளதால் கட்சித் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்குமாறு இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.