எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுருவை தாக்கிய பொலிஸார்!

0
446

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுரு ஒருவரை பொலிஸ் தாக்கியதாக தெரிவித்து மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா – நெளுக்குளம் 4ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்று (18-07-2022) எரிபொருளை பெற்று கொள்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருந்த போது பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரினால் மதகுரு ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து அங்கு நின்ற மக்கள் வவுனியா மன்னார் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தாக்கப்பட்ட மதகுருவிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அங்கு பதற்ற நிலைமை காணப்பட்டதோடு நீண்ட நேரமாக வவுனியா, மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

இதைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கப்பட்ட மதகுருவிடம் மன்னிப்பு கேட்டதற்கு இணங்க போராட்டம் கைவிடப்பட்டது.