ரணிலை பதவியில் இருந்து விரட்டும் நடவடிக்கைகள் தீவிரம்

0
573

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்த எதிர்வரும் இரண்டு நாட்களில் தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

இன்று முதல் தங்கள் அருகில் உள்ள நகரங்களில் போராட்டம் நடத்துமாறு மக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடே போராட்டக் களமாக மாறியிருப்பதால் பதில் ஜனாதிபதியும் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் இணைந்து பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் இந்தப் போராட்டத்தையும் வெற்றியுடன் முடிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.