அமெரிக்காவில் மதுபோதையில் சாலையின் நடுவே சிறிய ரக விமானத்தை தரையிறக்கிய விமானியை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புளோரிடாவில் இருந்து மிசோரி மாகாணத்துக்கு விமானம் சென்று கொண்டிருந்தபோது விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக விமானத்தை தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மிசோரியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு மத்தியில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.