களவாடப்பட்ட நாய் மீளவும் எஜமானரிடம் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்

0
526

றொரன்டோவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் களவாடப்பட்டு மீண்டும் எஜமானரிடம் இணைந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 8 மாத நாய்க்குட்டி காணாமல் போன சம்பவம் தொடர்பில் முகநூலில் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த பதிவினை பார்வையிட்ட நபர் ஒருவர் நாய் இருக்கும் இடம் பற்றி அறிவித்திருந்தார். வீதியில் தடுமாறிக் கொண்டிருந்த நாயை மீட்டதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

எனினும், சீ.சீ.ரீ.வி காணொளிகளை அவதானித்த போது நாயை களவாடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. நாய் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும், காணாமல் போன நாய்க் குட்டி மீளவும் கிடைக்கப் பெற்றதனால் நாயின் உரிமையாளர் பெரு மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.