யாழில் பதின்மவயது சிறுமியின் விபரீத முடிவு

0
596

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாரும் கவனிக்காத வேளை குறித்த சிறுமி வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.