19 ஆம் திகதி வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் அவருக்கு கீழ் ஒரு பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை இரு நியமனங்களும் செல்லுபடியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.