தபால் மூலம் பொருட்கள் அனுப்பும் சேவை இடை நிறுத்தம்

0
523

தற்போதைய எரிபொருள் பிரச்னை காரணமாக சில நாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கான விமான சேவைகள் தடையின் காரணமாக தபால் பொருட்களை ஏற்றி கொள்வது மறு அறிவித்தல் வர இடை நிறுத்துவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவிற்கான தபால் பொருட்கள் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் ]பிரச்சனை காரணமாக உள்நாட்டு தபால் போக்குவரத்தும் தாமதமாகி உள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.