ரஷ்ய விமான வழக்கு தள்ளுபடி நீதிமன்றம் உத்தரவு

0
522

ரஷ்யாவின் ‘ஏரோஃப்ளோட்’ விமானம் தொடர்பான வழக்கை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் நேற்று (15) தள்ளுபடி செய்துள்ளது.

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி, ஏர்போர்ட் அன்ட் ஏர்லைன் கம்பெனி லிமிடெட் கடந்த ஜூன் மாதம் (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஊடாக மனுவொன்றை தாக்கல் செய்தது.

நீதிமன்றத்தை நாடாமல் இந்த தடை உத்தரவு பெறப்பட்டதாக சட்ட மா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த உண்மைத் தன்மைகளை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.