முற்றாக முடங்கியது வடமராட்சி தனியார் பேருந்து சேவை!

0
538

கடந்த ஐந்து நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்காமையால் வடமராட்சி தனியார் சேவை இன்று காலை முதல் முழுதாக முடங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தனியார் பேருந்துகளுக்கு அந்தந்த சாலைகளிலிருந்து டீசல் வழங்கும் நடைமுறையுள்ள போதிலும், பருத்தித்துறை சாலை முகாமையாளரால் கடந்த ஐந்து நாட்களாக டீசல் வழங்கப்படவில்லை. இதனாலேயே இன்று பருத்தித்துறை யாழ்ப்பாணம்,பருத்தித்துறை மற்றும் கொடிகாமம் பேருந்து சேவைகள் முற்றாக முடங்கியது.

இந்நிலையில் பருத்தித்துறை சாலை முன்பாக தனியார் பேருந்துகளுடன் உரிமையாளர்கள், நடத்துநர்கள், சாரதிகள் காத்திருக்கின்றனர். இதேவேளை முல்லைத்தீவு சாலையிலிருந்த வந்த பேருந்து ஒன்று ஆறு கொள்கலன்களில் டீசலை ஏற்றி செல்வதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்து, பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.