ஜனாதிபதியின் பதவிவிலகல் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை!

0
388

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பதவிவிலகல் கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுக்கு (13) முன்னர் தமது பதவிவிலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார். ஆனால் இதுவரை கடிதம் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

“தான் மிகுந்த அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பதவிவிலகல் கடிதத்தை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிக்காமல், அவர் பதவி விலகியதாக கருத முடியுமா என்பது குறித்து சட்ட ஆலோசனைகள் பெற்று வருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.