ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ்,இராணுவ சிப்பாய் காயம்!

0
394

கொழும்பில் நாடாளுமன்றத்தைப் பிரவேசிக்கும் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இராணுவ சிப்பாய் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இராணுவ சிப்பாய் ஒருவரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 2 மெகசின்கள் மற்றும் 60 தோட்டாக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான முறைப்பாடு பொரளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.