எரிபொருள் வரிசையில் நின்ற நபரை கொடூரமாக தாக்கிய பொலிஸார்!

0
507

எரிபொருள் வரிசையில் நின்ற ஒருவரை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மஹரகம லங்கா ஐஓசி பெட்ரோல் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த தாக்குதலை மஹரகம பொலிஸ் கட்டுப்பாட்டு பிரிவின் கட்டளைத் தளபதி மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் போது எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்த பின்னர் தொட்டிகளைக் காட்டுமாறு கோரப்பட்டமையினாலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.