ரணிலுக்கு ஆப்புவைக்கும் சுமந்திரன், சாணக்கியன்

0
702

ஒரு நாளேனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என போராட்டக்காரர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் நேற்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரணிலுக்கு ஆப்புவைக்கும்   சுமந்திரன்,  சாணக்கியன் | Sumanthran And Chanakyan Who Are Supporting Ranil

அதோடு ஓடிவந்து பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் இரு மாதங்களுக்கு முன்பே ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்‌ஷ விலகியிருப்பார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே ஒரு நாளேனும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கு ரணிலுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை போராட்டக்காரர்களின் கருத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஒத்துப்போகின்றது எனவும் எம்.ஏ சுமந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.