வவுனியாவில் இ.போ.ச பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் – யுவதி கைது

0
676

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்ட குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தை புளியங்குளம் பகுதியில் வழிமறித்த குறித்த யுவதி பேருந்து நிறுத்தப்படாததையத்து ஆத்திரமடைந்த குறித்த யுவதி பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளார். இதனால் பேருந்தின் கண்ணாடி நொருங்கியுள்ளது .

இதையடுத்து பேருந்தின் சாரதி மேற்கொண்ட முறைப்பாட்டினடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி நகரில் வசிக்கும் 28வயது பெண் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவித்தனர்.