ரணிலுக்கு மீண்டும் அடித்த அதிர்ஷ்டம்!

0
1190

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த தற்காலிக ஜனாதிபதியாக செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ இன்று இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள நிலையில் நாளை இராஜினாமா குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமருக்கான தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.