சனிக்கிழமை நடந்த துப்பாக்கி சூடு பற்றி இராணுவம் விளக்கம் 

0
517

கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் சனிக்கிழமை (9) பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது, அவர்களுக்கு வேண்டுமென்றே தீங்கு விளைவிக்கும் வகையில் இராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறும் சில காணொளிகள் பரவி வருவது இலங்கை இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆர்ப்பாட்டகாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதை இராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது, ஆனால் எதிர்ப்பாளர்கள் வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் பிரதான நுழைவாயிலின் பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் மற்றும் வான் நோக்கி துப்பாக்கி சூட்டினை நிகழ்த்தினர்.

வான் மற்றும் பக்கச்சுவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவதால், பணியில் இருந்த அந்த இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டகாளர்களுக்கு வேண்டுமென்றே தீங்கு விளைவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்று அர்த்தப்படமாட்டாது.