ராஜபக்சாக்களுக்கு எண் 9 கேடா…!

0
698

ராஜபக்சாக்களுக்கு 9 ஆம் இலக்க எண் கெட்டதா 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி மக்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து மே 9ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் ஜூன் மாதம் 9 ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

இன்று ஜூலை 9 ஆம் திகதி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தனது அரச தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

69 லட்சம் மக்களின் ஆதரவு

69 லட்சம் மக்களின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ராஜபக்சாக்களுக்கு 9 ஆம் இலக்க எண் கெட்டதா என தென்னிலங்கை ஊடகமொன்று கேள்வியெழுப்பியுள்ளது.