இளைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை மிரட்டிய மர்ம நபர்கள்

0
431

மட்டக்களப்பில் இளைஞர்களையும் ஊடகவியலாளர்களையும் சில நபர்கள் அச்சுறுத்தியதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் வெடி கொளுத்தி கொண்டாத்தில் ஈடுபட்ட இளைஞர்களையே வெடி கொளுத்த வேண்டாம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

அச்சுறுத்தல்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் சென்று கொளுத்துமாறு இளைஞர்களை பிள்ளையான் கட்சியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

ஊடகவியலாளர்களை வீடியோ எடுக்க கூடாது என அச்சுறுத்தியுள்ளதுடன் அவர்களையும் இளைஞர்களையும் வீடியோ படம் எடுத்தும் சென்றுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்காரர்கள் முற்றுகையிட்டதையடுத்து அதற்கு ஆதரவு தெரிவித்தே மட்டக்களப்பு நகரத்தில் நேற்று(9) மாலை 5 மணியளவில் இளைஞர்கள் வெடி கொளுத்தி வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகர பொலிஸ் தலைமையகத்தின் முன்னாள் உள்ள வீதியிலேயே இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இருவர்

பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த இருவர் அங்கு கார் ஒன்றில் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அச்சுறுத்தி வீடியோ எடுத்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.