பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்; நீதிமன்ற அதிரடி உத்தரவு

0
509

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தடையுத்தரவு ஒன்றை கோரி கருவாத்தோட்டம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவினுள் அமைந்துள்ள சில வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்றை வௌியிடுமாறு பொலிஸாரால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த கோரிக்கை இன்று கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.