ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை காலிமுகத்திடல் போராட்டக்குழு ஏற்பட்டாளர்கள் சார்பில் வருகை தந்தவர்கள் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பானது நேற்று (07-07-2022) மாலை “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் சந்தித்தனர்.
இலங்கையை முழுவதுமாக சீரழித்து பாதாளத்தில் தள்ளியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaska) வீட்டுக்கு அனுப்பும் பாரிய மக்கள் எதிர்ப்புப் போராட்டம் 9ஆம் நடைபெறவுள்ள நிலையில் அதுதொடர்பில் அவர்கள் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.