வாய் தகராறில் துப்பாக்கியால் சுட்ட மொட்டு கட்சி எம்.பி!

0
733

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார கட்சி ஆதரவாளர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. களுத்துறை அங்குருவத்தோட்டையில் சமய நிகழ்வொன்றில் எம்.பி கலந்து கொண்ட போதே கட்சி ஆதரவாளர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு முறுகல் நிலை தொடர்ந்துள்ளது.

வாய்த்தகராறில்   துப்பாக்கியால் சுட்ட மொட்டு கட்சி எம்.பி! | Budding Party Mp Who Pulled Out A Gun

இந்தநிலையிலேயே எம்.பி வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இச் சம்பவத்தின் போது யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த படை வீரர் ஒருவரின் அஞ்சலி நிகழ்வுக்கு தொம்பகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு அவர் சென்றுள்ளார். அங்கு அவர் ஏனையோருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து எம்பி அங்கிருந்து வெளியேறினார்.

இதன் பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் வீடு மற்றும் வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஹொரணை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.