பிரித்தானியாவில் தற்போது அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் பதவியில் இருந்தும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் போரிஸ் ஜோன்சன் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் ராஜினாமாவிற்கு பின் இந்தக் கோடையில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான தலைமைப் போட்டி நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
மேலும், இலையுதிர் காலம் வரை போரிஸ் பிரதமராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, ஒக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளது என்று அரசியலறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.