நியூசிலாந்தில் மாஸ்கால் முடப்பட்ட குழந்தையின் முகம்; வைரலான புகைப்படம்

0
600

நியூசிலாந்தில் ஒரு குழந்தையின் முகம் முகக்கவசத்தால் முடப்பட்டு கண்கள் வழியாகப் பார்ப்பதற்கு மட்டும் மாஸ்கில் சிறு ஓட்டைகள் இடம்பெற்றிருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த புகைப்படமானது ஜூலை 1ம் திகதி நியூசிலாந்தின் ஆக்லாந்திலிருந்து வெலிங்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தில் பெரியவர்கள் அணியும் முகக்கவசத்தில் மேலே இரு துளைகள் மட்டும் இடப்பட்டு அந்தக் குழந்தைக்கு அணிவித்திருந்தனர்.

சமூக ஊடகங்களில் வெளியான அந்த புகைப்படமானது பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டது. சிலர் குழந்தைகள் மீது செலுத்தும் வன்முறை என விமர்சித்திருந்தனர். இவ்வாறு குழந்தைக்கு மாஸ்க் அணிவிப்பதன் மூலம் கொரோனா தொற்று தடுக்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ஆனால் அந்த புகைப்படத்தை பதிவு செய்த நபர், அதற்கு உரிய விளக்கமும் அளித்திருந்தார். அதில், அந்தக் குழந்தை மிக மகிழ்ச்சியாக துள்ளிக் குதித்து கொண்டிருந்தது. இது விமானத்திலிருந்து இறங்குவதற்கு காத்திருந்த நேரத்தை ரசனையாக மாற்றியது.

மட்டுமின்றி அந்த மாஸ்க் குழந்தையின் முகத்திற்கு நெருக்கமாக அணிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.