பதவியை ராஜினாமா செய்ய தயார்; பிரதமர் அதிரடி அறிவிப்பு

0
595

தனது பதவியை இராஜினாமா செய்ய தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பிரதமர் பதவியை வழங்குங்கள் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு முடியுமென்றால் அந்த திட்டத்தை வரவேற்கின்றோம். அநுர குமார திஸாநாயக்கவின் திட்டம் வெற்றியளிக்கும் என்றால் உடனடியாக பதவியை விலக தயாராக உள்ளதாகவும் பிரதமர் ரணில் கூறினார்.

அதோடு பாரிய வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டை 6 மாதங்களுக்கு மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர அநுர குமாரவிடம் திட்டமிருந்தால் அதற்கு ஒரு நோபல் பரிசு வழங்க முடியும் என தெரிவித்த பிரதமர் எனவே அந்த திட்டத்தை ஜனாதிபதியிடம் முன்வைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதியிடம் முன்வைக்க விருப்பமில்லை என்றால் நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

எனவே எங்களை விடவும் சிறந்த வேலைத்திட்டம் உள்ள ஒருவரிடம் நாட்டை வழங்குவதற்கு தான் ஒருபோது எதிர்ப்பு வெளியிட மாட்டேன் என கூறிய அவர் அநுர குமாரவினால் 6 மாதங்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென்றால் எனது பதவியை விட்டுக்கொடுத்து இராஜினாமா செய்வதற்கு தயாராக உள்ளேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் பிரதமர் பதவி விலகுவதாக கூறியவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கோ ஹோம் கோட்டா என கூச்சிலிட ஆரம்பித்ததனால் நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.