யாழில் ஐப்பான் தூதுவரை சந்தித்த அமைச்சர் டக்ளஸ்!

0
577

வடக்கு பகுதிக்கு மூன்று நாட்கள் விஜயத்தினை இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி உள்ளிட்ட குழு மேற்கொண்டுள்ளது.

யாழில் நேற்றைய தினம் (29-06-2022) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் (Douglas Devananda) ஜப்பான் தூதுவர் குழுவுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. 

இந்த தகவலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்போது, சமகால அரசியல் நிலைவரங்கள், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், குறிப்பாக கடலட்டை உற்பத்தி உட்பட நீர்வேளாண்மை எனப்படும் பண்ணை முறையில் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவுகளை உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஜப்பானிய துாதுவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தியனர்.

மேலும், ஜப்பானின் உயரிய தொழில்நுட்ப அனுபவங்களும் – உதவிகளும் கிடைக்குமாயின், எமது மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.