எரிபொருள் வரிசையில் காத்திருத்த வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

0
549

இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.A.கேதீஸ்வரன் எரிபொருள் வரிசையில் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுகாதார சேவைகள் திணைக்களத்தினருக்கான பெற்றோல் விநியோகம் இன்று மாலை வடமராட்சி புலோலி பல நோக்கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகிக்கப்பட்டது.

இதன் போது 4 கிலோ மீற்றர் வரை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வரிசையில் காத்திருந்தன.

இவ் வரிசையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.A.கேதீஸ்வரனும் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கான பெற்றோளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பல நூற்றுக்கணக்கான தாதியர்கள், வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் வரிசையில் காத்திருத்த வடமாகாண முக்கியஸ்தர்!