சென்னையில் கடனால் இறைச்சி கடைக்காரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

0
422

கடன் தொல்லையால் இறைச்சி கடைக்காரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் சென்னை ராயப்பேட்டையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் சென்னை ராயப்பேட்டை ஆர்.ஓ.பி. மெயின் ரோடு பீட்டர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த 28 வயதான சாகீர் உசேன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடன் பிரச்சனையால் இறைச்சி கடைக்காரர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!

தனது தந்தை நடத்தி வந்த இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் புதிய கடை ஒன்றை தொடங்குவதற்காக கடன் வாங்கியதாகவும் அதை திரும்ப செலுத்த முடியாமல் கடன்தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாகீர் உசேன் நேற்று (25-06-2022) காலை வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பில் அண்ணாசாலை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.