அமெரிக்காவில் தாயின் அலட்சியத்தால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

0
464

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமண்டா மீன்ஸ் (36) என்ற தாய் தனது குழந்தையை காரில் மறந்து விட்டுச்சென்ற நிலையில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அமண்டா மீன்ஸ் என்ற அமெரிக்க தாய் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே காரை விட்டுச்சென்றுள்ளார். இந் நிலையில் காரின் பின் இருக்கையில் கட்டப்பட்டு இருந்த தனது மகன் Trace-யை (5) மறந்து அவர் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்ட அமண்டா கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்தே மகன் Trace-யை காணவில்லை என்பதை உணர்ந்துள்ளார்.

அப்போது தான் தனது 5 வயது மகன் காரின் பின் இருக்கையில் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்த அமண்டா மீன்ஸ் உடனடியாக காருக்கு ஓடி சென்று பார்த்த போது Trace சுயநினைவு இன்றி இருதுள்ளான்.

அமெரிக்காவில்  சுட்டெரித்த வெய்யில்;  தாயின் கவனக்குறைவால் அரங்கேறிய பெரும் சோகம்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அவசர சிகிச்சையை அழைத்து Trace மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரின் பூட்டப்பட்ட காரில் அதிகரித்த வெப்பத்தின் காரணமாக சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணையை தொடங்கிய பொலிஸார் தவறுதலாக சிறுவனை காரில் விட்டு சென்றதே உயிரிழப்பு காரணம் என தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சிறுவன் இறந்த தினத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 37C வெப்பநிலை இருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடதக்கது.