இலங்கையில் இருந்து வந்த ஈழத் தமிழா்களை அகதிகளாக அறிவியுங்கள் – பாமக தலைவா்

0
401

இலங்கையில் இருந்து வந்த ஈழத் தமிழா்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களில் 90 ஈழத்தமிழா்கள் தமிழகம் வந்துள்ளனா். இந்நிலையில் அவா்கள் இதுவரை அகதிகளாக அறிவிக்கப்படவில்லை.

இலங்கையில் இருந்து வந்தவா்களை அகதிகளாக அறிவியுங்கள்!

சட்டவிரோதமாக குடியேறியவா்களாக கருதி அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த ஈழத் தமிழா்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடிதம் எழுதி இரு மாதங்களாகியும் அதன் மீது மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக ஈழத் தமிழா்களுக்கு உதவிகள் வழங்க முடியவில்லை. எனவே அவா்களை அகதிகளாக அறிவித்து உதவிகளை வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.