பரபரப்பை ஏற்படுத்திய உக்ரைன் அதிபர் அறிவிப்பு!

0
522

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரானது முடிவில்லாது நீண்டுவரும் நிலையில் ரஷியா சண்டையை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியா உக்ரைன் போர் தடையின்றி தொடர்ந்து 117வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் தொழில்துறை டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷியா முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனின் கிழக்குப் பகுதிகள் கடந்த பல வாரங்களாக கடுமையான போர் தாக்குதல்களால் சீரழிந்துள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய  உக்ரைன் அதிபரின்  அறிவிப்பு!

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த  அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறுகையில்,

“இந்த வாரம் ரஷியா போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என்று நாங்கள் வெளிப்படையாக எதிர்பார்க்கிறோம். அதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம். நாங்கள் தயார். கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகளின் புதிய தாக்குதல்களை உக்ரைன் முறியடித்தது.

நாங்கள் தெற்கு உக்ரைன் பகுதியை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்களுடையது அனைத்தையும் திருப்பி பெறுவோம். கருங்கடல் உக்ரேனியர்களுடையதாகவும் பாதுகாப்பாகவும் மாறும்.

நம் ராணுவம் காத்துக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக சேருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்காக உக்ரைன் காத்திருக்கிறது. அவர்களிடமிருந்து இந்த வார இறுதிக்குள் ஒரு நம்பிக்கையான முடிவை எதிர்பார்க்கிறோம்.

உக்ரைனுக்கு இதுபோன்ற சில விதிவிலக்கான முடிவுகள் அமைந்து இருப்பதாக ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறினார்.

பரபரப்பை ஏற்படுத்திய  உக்ரைன் அதிபரின்  அறிவிப்பு!

அதேவேளை நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ( Jens Stoltenberg) கூறுகையில், உக்ரைன் மீதான ரஷியாவின் போர் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எச்சரித்ததுடன் நீண்ட கால இராணுவ அரசியல் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க மேற்கு நாடுகள் தயாராக இருக்குமாறும் வலியுறுத்தினார்.