உங்கள் தொப்புள் கொடியைக் சிதைத்து விடுவோம்; ரஷ்யாவை எச்சரித்த உக்ரைன்!

0
480

கிரிமியா தீபகற்பத்துடன் ரஷ்யாவை இணைக்கும் மிகப் பெரிய பாலத்தை சிதைத்து விடுவோம் என உக்ரேனிய முக்கிய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் டிமிட்ரோ மார்ச்சென்கோ (Dimitra Marchenko) ரஷ்யாவுக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

விளாடிமிர் புடினின் படைகளுக்கு எதிராக உக்ரைனில் நடந்து வரும் போரில் 745-அடி கெர்ச் பாலம் தங்கள் இராணுவத்தின் முதன்மை இலக்காகக் கருதப்பட்டதாக உக்ரைன் மேஜர் ஜெனரல் டிமிட்ரோ மார்ச்சென்கோ (Dimitrov Marchenko) தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் தெற்கில் உள்ள மைகோலேவ் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு தலைமை தாங்கிவரும் தளபதி டிமிட்ரோ மார்ச்சென்கோ (Dimitrov Marchenko) தனியார் செய்தி இணைய பக்கத்திற்கு அளித்த நேர்காணலில் இதனை கூறினார்.

உங்கள் தொப்புள் கொடியை சிதைத்து விடுவோம்;   ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை!

2.7 பில்லியன் பவுண்டுகள் செலவிட்டு கட்டி முடிக்கப்பட்ட குறித்த பாலமானது ரஷ்யாவை பொறுத்தமட்டில் தொப்புள் கொடியை போன்றது என்றும் மேற்கத்திய நாடுகள் அதி நவீன ஆயுதங்களை தங்களுக்கு வழங்கும் எனில் உக்ரைன் இராணுவத்தின் முதன்மையான இலக்கு அந்த பாலமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ரஷ்யாவுக்கு பேரதிர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால், குறித்த பாலம் சிதைக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர் ரஷ்யாவை புறமுதுகிட்டு ஓடவிட வேண்டும் எனில் நட்பு நாடுகள் தங்களுக்கு நவீன ஆயுதங்களை அளிக்க முன்வர வேண்டும் எனவும் கூறினார். மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் காரணமாகவே உக்ரைன் இதுவரை ரஷ்யாவிடம் சரணடையாமல் உள்ளது.

இருப்பினும், ஆபத்தான ஆயுதங்களை உக்ரைனுக்கு அளிக்க மேற்கத்திய நாடுகள் இதுவரை தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

2014ம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை தனது பக்கம் இணைத்துக் கொண்டது ரஷ்யா. கெர்ச் பாலத்தின் கட்டுமானம் 2018ல் நிறைவடைந்தது. அதன் பின்னர் கருங்கடல் பகுதிக்கு துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை வழங்க ரஷ்யா கெர்ச் ஜலசந்தியைக் கடக்கும் பாலத்தைப் பயன்படுத்தி வந்துள்ளது.

உங்கள் தொப்புள் கொடியை சிதைத்து விடுவோம்;   ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை!

இவ்வாறான நிலையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்த ரஷ்யா குறித்த பாலம் அமைந்த பகுதி வழியாகவே இந்த தாக்குதலை தொடுத்தது.

அதேவேளை குறித்த பாலம் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் எனவும் உக்ரைன் தளபதி விடுத்துள்ள மிரட்டலுக்கு ரஷ்யா பதிலளித்துள்ளது.